Posts

சினிமா போல் சிறந்த தொழில் எதுவும் இல்லை - டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

Image
டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான துஷாந் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்ற இதில், சிறந்த 10 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மூன்று பேருக்கு முதல் மூன்று பரிசு மற்றும் காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. குறும்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு பிரிவில் தேர்வு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், நினைவு பரிசு, பதக்கம் ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்டது.  இந்த நிகழ்வில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ் குமரன், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பாண்டிராஜ், கணேஷன், நடிகைகள் அஸ்மிதா, ஷியமளா, ஸ்டண்ட் யூனியன் தலைவர் டான் அசோக் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தனர். நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய துஷாந், “இந்த குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவுக்...

‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த முக்கிய அத்தியாயம் – ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்

Image
மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன் ‘யெல்லோ’ (Yellow) படத்தின் மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற நடிகர் வைபவ் முருகேசன், தனது அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ (Mammatiyaan Stars) மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளார். இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் வெப் தொடர், ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து இளைஞர்கள் குழு, சென்னை சென்று பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்குகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் ஒரு மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதிலிருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் புத்திசாலித்தனமான யுக்திகள் மற்றும் புதிய வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆகியவற்றை நகைச்சுவை, உணர்வு மற்றும் ஊக்கமூட்டும் தருணங்களுடன் சொல்லும் தொடர் தான்  சபீர் சுதாகரின் இயக்கத்தில் உருவாகிய ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. இந்த தொடரில் வைபவ் முருகேசனுடன் வெங்கட் பாலமுரளி, ஜகா, லாவண்யா, ஷரத் ...

ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு இலுமினாட்டி அமைப்பா? உண்மையை உடைத்த ஃப்ரீமேசன்ஸ் தலைவர்

Image
இலுமினாட்டிகள் போல் செயல்படும் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு இலுமினாட்டி அமைப்பா என்ற கேள்விக்கு அதன் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் உலகளாவிய சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் தேசிய தலைவர் குத்தா கிருஷ்ணன் செல்வராஜன் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு இலுமினாட்டி இல்லை என்று கூறினார். சேவை மனப்பான்மையோடு செயல்பட்டுவரும் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு, தங்களுடைய சேவைகள் தொடர்பாக ரகசிய கூட்டங்கள் நடத்துவது உண்மைதான் என்று தெரிவித்தார். ஆனால், இலுமினாட்டிகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உறுதிபட கூறினார். ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு இலுமினாட்டி அமைப்பா? சேவை, தலைமைத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 300 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட ஃப்ரீமேசன்ஸ் அமைப்பினர், ஆண்டுதோறும் ஜூன் 24 அன்று கடைபிடிக்கப்படும் 'சகோதரத்துவ தினத்தை' கொண்டாடுவதற்காக புதன்கிழமையன்று சென்னையில் ஒன்றுகூடினர். சென்னை எழும்பூர், எத்திராஜ் சாலையில் உள்ள 'ரீஜினல் கிராண்ட் லாட்ஜ் ஆஃப் சதர்ன் இந்தியா' (Reg...

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்

Image
புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. “ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புஷ்பநாதன் ஆறுமுகம் எழுதி, இயக்கியுள்ள இந்த பாடல், வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்களும், வலிகளும், நிராகரிப்புகளும் நம்மை பழிவாங்க இயக்குபவையல்ல. மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில் என்ற வலுவான கருத்தை எடுத்துரைக்கிறது. முன...

தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

Image
BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் *“அட்டாக்கர்”* படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார். வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமாக “அட்டாக்கர்” அமைகிறது. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அடையாளங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும...

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'லவ்வர் பாய்' திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ள கிருத்தி ஷெட்டி

Image
  சிறந்த திரைப்படங்கள் அனைத்தும் துணிச்சலான முடிவில் இருந்துதான் தொடங்குகிறது. உலகம் அங்கீகரிப்பதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் புதிய திறமையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் காதல், சுப்ரமணியபுரம் மற்றும் பீட்சா முதல் மாபெரும் சாதனை படைத்த பாகுபலி: தி பிகினிங், கே.ஜி.எஃப்: சாப்டர் 1 மற்றும் காந்தாரா வரை பல மறக்க முடியாத திரைப்படங்கள் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவிலும் ராக்கி, தி பிளேர் விட்ச் புராஜெக்ட் மற்றும் கெட் அவுட் போன்ற திரைப்படங்கள் புதிய திறமையாளர்கள் மீதான நம்பிக்கை சினிமா வரலாற்றை உருவாக்கும் என்பதை நிரூபித்தன. அந்த வரிசையில், சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ், வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து புதிய சுவாரஸ்யமான கதைக்களங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று இந்திய சினிமாவில் தனியிடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் புதுமையான கதைக்களங்களை தொடர்ந்து ஆதரிப்பதோடு புதிய திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்ற...

நடிகர் விஷால் வழங்கிய விலைமதிப்பற்ற பரிசு! - முதல்வர் ஜோசப் விஜய் நெகிழ்ச்சி

Image
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், தனது பாணியில் அவருக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.  விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஏழை மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறார். மேலும், தான் நடத்தும் நிகழ்ச்சி மற்றும் மற்றவர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு வழங்கும் பொன்னாடை, பூங்கொத்து உள்ளிட்ட பரிசுகளை தவிர்த்து வருபவர், அதற்கு மாறாக சம்மந்தப்பட்டவர்களின் பெயரில் ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், ஜூன் 15 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், அவருக்கு வழங்கப்படும் பரிசாக, அவரது பெயரில் மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜயிடம், மூன்று மாணவிகளின் விபரம் அடங்கிய கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். அதில், “உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்களுக்கான சேவையில் உங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் ...