லண்டனில் தொடங்கிய த்ரிஷா – ராதிகா – அபர்ணா பாலமுரளி இணையும் புதிய சைக்கலாஜிக்கல் திரில்லர் படப்பிடிப்பு
நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்முறையாக ஒன்றிணையும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்த உளவியல் திகில் (Psychological Thriller) திரைப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் இணைந்து தயாரிக்கின்றன. இது பனோரமா ஸ்டுடியோஸின் முதல் தமிழ் தயாரிப்பாகும்.லண்டனில் தொடங்கிய த்ரிஷா – ராதிகா – அபர்ணா பாலமுரளி இணையும் புதிய சைக்கலாஜிக்கல் திரில்லர் படப்பிடிப்பு! நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய தமிழ் உளவியல் திகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இது பனோரமா ஸ்டுடியோஸின் முதல் தமிழ் தயாரிப்பாகும். 'ஏர்லிஃப்ட்', 'செஃப்', 'பிப்பா' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன், இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவிலும், சைக்கலாஜிக்கல் திரில்...