Posts

வாழ்க்கையே போராட்டம் மக்களுக்கான அரசியல் படம்

Image
நடிகர் விவேக் உடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு ‘வாழ்க்கையே போராட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.வி.ஆர் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.கே.ஏ.அசோக் குமார் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தில் செந்தில், பாவா லட்சுமணன், முத்துக்காளை, சுப்பராஜ், ரெபக்கா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் இயக்குநர்கள் பேரரசு மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.  அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு வேலன் சகாதேவன். ஜி இசையமைக்க, வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் எழிலரசன் பாடல்கள் எழுத, ரவி தேவ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். பி.ஆர்.ஓவாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று (ஜூலை 14) காலை, பூஜையுடன் சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் விஜயமுரள...

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’

நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தை தயாரிக்கிறது.  இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள் உண்டு. ‘அல்மோஸ்ட் தேர்...’, ’அல்மோஸ்ட் டன்...’ போன்ற சொற்களைப் போலவே, இப்படத்தின் கதையிலும் அந்த வார்த்தைக்கு முக்கிய இடம் உண்டு....

இம்மானுவேல் அரசர் ஃபிலிம்ஸ் சார்பில்,டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலை அரசர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “கள வேட்டை”.

Image
உண்மை சம்பவங்கள் படமாக்கப்பட்டால் சாதாரண சினிமாவை விட ஒரு படி மேலான எதிர் பார்ப்புகள் அப்படத்திற்கு இருக்கும். அப்படி, தமிழ் நாட்டையே அதிரவைத்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை களத்தை, மக்களுக்கு பிடித்த வகையில் இன்வெஸ்டிகேசன் திரில்லராக உருவாக்கி வருகிறார்கள். “கள வேட்டை” திரைப்படம் வெறும் குற்ற விசாரணைக் கதையாக மட்டுமல்லாமல், சமூகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை, முகத்தில் அறைந்து சொல்லும் உண்மைகளை வெளிக்கொணரும் படைப்பாக உருவாகியுள்ளது. உண்மைகளை வெளியுலகிற்கு கொண்டு வரும் அப்படி ஒரு காவல்துறை அதிகாரியாக டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலைஅரசர் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடிகை தன்ஷிகா நடிப்பில் வெளியான ‘யோகிடா’ என்ற அதிரடி ஆக்‌ஷன் படத்தை இயக்கி பாராட்டு பெற்ற கௌதம் கிருஷ்ணா, இப்படத்தை இன்னொரு வித்தியாச திரில்லர் ஜானரில் இயக்கி வருகிறார். உண்மை சம்பவங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் பல அதிர்ச்சி தகவல்களை ஆராய்ந்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் வகையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நியூசி...

இளம் நடிகர்கள் அனந்த் ராம் - பிரிகிடா காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..

Image
  நடிகர் அனந்த் ராம் மற்றும் நடிகை பிரிகிடா, அனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளத்தின் மூலம் தங்களது காதல் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவை நோக்கி பயணித்த இருவரும், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்களாக தங்களை நிலைநிறுத்தி வருகின்றனர். சினிமாவே இவர்களை சந்திக்க வைத்ததோடு, அந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் “மீசைய முறுக்கு தம்பி” மற்றும் “பவி டீச்சர்” என்ற அடையாளங்களால் அறியப்படும் இவர்கள், தற்போது தமிழ் திரையுலகின் புதிய நிஜ வாழ்க்கை ஜோடிகளில் ஒருவராக இணைந்துள்ளனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில், திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையின் இந்த அழகான புதிய அத்தியாயத்துடன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல புதிய படைப்புகளிலும் இருவரும் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பும், ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என இருவரும் அன்புடன்...

மைத்ரி மூவி மேக்கர்ஸின் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது.

Image
சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என அனைத்தும் சேர்ந்ததுதான். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் படமாக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் படப்பிடிப்பை குறித்த காலத்திற்குள் முடித்து கொடுத்தார். திரைக்கதையின் மீது அவர் கொ...

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்

Image
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார். யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் நிறைவை நோக்கி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறியதாவது, "'ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் க...

விரைவில் வெளியாகும் ‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலம்!

Image
மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், பல்வேறு மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த கதைக்களத்தை முன்னிறுத்துகிறது. விறுவிறுப்பான காட்சிகள், பின்னணி இசை மற்றும் திகில் கலந்த திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுக்கு பின் படக்குழு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.  இந்நிகழ்வினில் இயக்குநர் அபிலாஷ் வாரியர் பேசியதாவது.., “முதலில் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் மலையாளம் மட்டுமல்ல, எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்...