சினிமா போல் சிறந்த தொழில் எதுவும் இல்லை - டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு
டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான துஷாந் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்ற இதில், சிறந்த 10 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மூன்று பேருக்கு முதல் மூன்று பரிசு மற்றும் காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. குறும்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு பிரிவில் தேர்வு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், நினைவு பரிசு, பதக்கம் ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ் குமரன், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பாண்டிராஜ், கணேஷன், நடிகைகள் அஸ்மிதா, ஷியமளா, ஸ்டண்ட் யூனியன் தலைவர் டான் அசோக் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தனர். நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய துஷாந், “இந்த குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவுக்...