இந்திய கொடிக்கு பக்கத்தில் ஆஸ்திரேலிய கொடி.. ஓஹோ விவகாரம் பெருசா இருக்கே.. சிக்கிய பலே கில்லாடி!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் பாறைக்குழிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை கட்டிடம் சின்ன கோடங்கிபாளையத்தில் உள்ளது. இதனிடையே தொழில்சாலையை ஒட்டியுள்ள பாறைகுழியில் அருண்குமாருக்கு சொந்தமான காஸ்டிங் தொழில் சாலையில் இருந்து கழிவுகளை பாறைகுழியில் கொட்டிவந்துள்ளார். மேலும் இப்பகுதியில் பாசன ஓடைகள் இல்லாத நிலையில் இதுபோன்று பாறை குழியில் சேமிக்கப்படும் தண்ணீரினால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் காஸ்டிங் கழிவுகள் கொட்டப்படுவதால் நீரின் தன்மை பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி விவசாயிகள், உரிமையாளர் அருண்குமாரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் கழிவுகளை அகற்றாமல் அலட்சியமாக செயல்பட்டதால் விவசாயிகள் அதிரடியாக கழிவுகளை அருண்குமாருக்கு சொந்தமான நிறுவன வளாகத்தில் கொண்டு சென்று கொட்டியுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கும் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ...