Posts

நடிகர்கள் அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது

Image
  'பேச்சுலர்' படப்புகழ் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், திங்க் மியூசிக் உருவாக்கத்தில், நடிகர்கள் அசோக்செல்வன், மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ளது '18 மைல்ஸ்'. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த பாடலின் கவிதைத்துவமான மனதை வருடும் உணர்வுகளுடன் கூடிய '18 மைல்ஸ்'ஸின் பல புரோமோக்கள் வெளியாகி கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. பாடலில் கதை இடம்பெற்ற 15 நிமிட புரோலோக் காட்சிகள் '18 மைல்ஸ்' கதையின் காதல், நம்பிக்கை, மீண்டு வருதல் போன்ற உணர்வுகள் பற்றிய பார்வையை வழங்கியதோடு உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இயக்குநர்கள் 'பூ' சசி மற்றும் அஸ்வத் மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, நடிகர்கள் கிஷன் தாஸ் மற்றும் கீர்த்தி பாண்டியன் என திரைத்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பல பிரபலங்கள் '18 மைல்ஸ்' புரோலாக் செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டனர். இவர்களுடன் '18 மைல்ஸ்' (தாரணா) படக்...

உண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில் எம்.பி'க்கு, மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான தக்‌ஷன் விஜய் ஆதரவு

Image
  தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசை எதிர்த்து 3வது நாளாக தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் இருக்கும் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை எடுத்து வருவதால், விரைவில் நலம் பெறவும் வேண்டுகிறேன்! இப்படிக்கு, நடிகர் தக்‌ஷன் விஜய், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவர்.

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'

Image
  பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கார்மேனி செல்வம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகிறது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, "அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்," என்றார். 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின்...

ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்”  படக்குழு

Image
  நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத  அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ்  – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்”  படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !! நேச்சுரல் ஸ்டார் நானி, தனது மிகப்பெரிய கனவு முயற்சியான “தி பாரடைஸ்” படத்திற்காக முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். தசரா புகழ் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, சுதாகர் சேருகூரி தயாரிப்பில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் இந்த ஆக்சன் டிராமாவை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டு அதிரடியான பர்ஸ்ட்-லுக் போஸ்டர்கள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் என்கிற பட உருவாக்க காட்சிகள், படத்துக்கான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு வெளியான முதல் கிளிம்ப்ஸே காட்சியிலேயே, தி பாரடைஸ் படக்குழு இப்படம்  உலகளாவிய  ரசிகர்களுக்கானது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்வது முதல், துணிச்சலான புரமோஷன் வரை – ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த படம் இந்தியாவுக்கு மட்ட...

KVN Productions மற்றும் Wadeyar Movies தயாரிப்பில், சிவண்ணா – வெங்கட் கோனங்கி (Venkat Konanki) – பவன் வடேயார் (Pavan Wadeyar) இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது

Image
ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood)  பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் ( Pavan Wadeyar) இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக ( Puneeth Rajkumar.) இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும்  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா (Mandya) இமாச்சலப் பிரதேசம் ( Himachal Pradesh), மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN Productions இந்தப் படத்தை தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான Wadeyar Movies மற்றும் வெங்கட் கோனங்கி (Venkat Konanki) தலைமையிலான KVN...

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது

Image
துல்கர் சல்மானின் Wayfarer Films  தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன்  - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இவ்வளவு பெரிய கேன்வாஸில் கதை சொல்லியிருப்பது—மலையாள சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று. இதன் மூலம் துல்கர் மிகத் துணிச்சலான, தொலைநோக்குடன் கூடிய முடிவை எடுத்துள்ளார். இது மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வரலாற்றில் வித்தியாசமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை உடைத்து மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் சக்தியாகவே Wayfarer Films மாறியுள்ளது. ...

ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல்

Image
பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும்  உருகச் செய்துள்ளது.  தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார். அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும், உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகளில் விழுந்தபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை, முழுமனதுடன் தன் ரசிகையின் அன்பை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டார்.  சிரஞ்சீவி ராஜேஸ்வரியை இதயம் நெகிழ்ந்த  அன்புடன் வரவேற்றார். அவர் காட்டிய உண்மையான அன்பையும், தனது கனவை அடைவதற்காக எ...