Posts

மெட்ராஸ் டாட் காம் நிறுவனத்தின் புதிய வீட்டுமனைப் பிரிவு ஆவடி பருத்திபட்டு, கண்ணம்பாளையம் பகுதியில் வர்ஷா கார்டன் என்ற பெயரில் விற்பனைக்கான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

மெட்ராஸ் ப்ராப்ர்ட்டீஸ் டாட் காம் நிர்வாக இயக்குநர்  ஜெயச்சந்திரன் , வர்ஷா கார்டன் மனைகள் குறித்த சிறப்பம்சங்களை விவரித்தார்: இந்த மனைப் பிரிவானது ஆவடி ரயில் நிலையம்,  மகரிஷி வித்யாலயா,  வேலம்மாள் வித்யாலயா,  கே .சி. பல்நோக்கு மருத்துவமனை, ஆவடி  இ.எஸ் ஐ. மருத்துவமனை ஆவடி பஸ் நிலையம், மார்க்கெட் அனைத்தும்  5 முதல் 10 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.  மேலும் 24 மணி நேர போக்குவரத்து வசதி,  சுத்தமான, சுவையான  நிலத்தடி நீர்,  உடனே வீடு கட்டி குடியேறும் வகையில் பாதுகாப்பாக மனையை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இந்த வீட்டு மனைபிரிவு  சி.எம்.டி.ஏ மற்றும் ரோரா அங்கீகாரத்துடன் 800 சதுர அடி முதல் 1300 சதுர அடி வரையில், ரூ.32 இலட்சம் முதல் தனி வீடுகள் ரூ.57 முதல்  அவரவர் தேவைக்கேற்றவாறு மதிப்பீட்டில்  கட்டித்தரப்படும்.  வீட்டுமனைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 80% வங்கி கடன் வசதி செய்து தாப்படும். வங்கி கடன்பெறாதவர்கள் 50% சதவீதம் முன் பணம்  செலுத்தி தவணை முறையில் மனைகளை சொந்தமாக்கி  கொள்ளாலாம். வாடிக்கையாளர்கள் ...

டீஜய் அருணாசலம் நடிக்கும் “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
“உசுரே” ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷனில் அறிமுக இயக்குனர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக மற்றும் எதார்த்தமான களத்தையும் திரைக்கதையையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது.   அதைத்தொடர்ந்து “உசுரே” திரைப்படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் போன்ற பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது.   இப்படத்தில் முன்னணி நடிகர்களான டீஜய் அருணாசலம், ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் நடித்துள்ளனர் மற்றும் ஆதித்யா கதிர் தங்கதுரை நகைச்சுவையில் அசத்தியுள்ளனர்.   இந்த கதை உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு-ஆந்திர எல்லையான சித்தூரில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில் சீசா

Image
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரித்து கதை எழுதியிருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குந்=அர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி குமார் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, மாஸ்டர் ராஜநாயகம், தயாரிப்பாளர் டாக்டர்.செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்வு வெளியீட்டு முன்னதாக ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக, “படத்தில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருப்பதோடு, மேக்கிங்கும் சிறப்பாக உள்ளது” என்று அனைத்து பத்திரிகையாளர்களும் இயக்குநரை பாராட்டினார்கள். பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய இயக்குநர் குணா சுப்பிரமணியம், “நான் இந்த இடத்தில் நிற்பதற்கு டாக்டர்.கே.செந்தில் வேலன் சார் தான் காரணம். என் உடல் நிலை மற்றும் மனநில...

தமிழகத்தின் அவல நிலையை ‘கலன்’ மூலம் இயக்குநர் வீரமுத்து படம் பிடித்து காண்பித்திருக்கிறார் - எச்.ராஜா பாராட்டு

Image
ராஜலெக்‌ஷ்மி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜேஷ்வரி சந்திரசேகரன் தயாரிப்பில், ’கிடுகு’ பட புகழ் இயக்குநர் வீரமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கலன்’. தீபா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி, சம்பத் ராம், சேரன் ராஜ், யாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்வு டிசம்பர் 31 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுடன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மற்றும் பத்திரிகையாளர், நடிகர், திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துக் கொண்டார்கள். படம் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய எச்.ராஜா, “இன்றைய தினம் தமிழகத்தின் அவலமான நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் வீரமுருகன். இதற்கு முன்பு கிடுகு என்று படத்தை எடுத்திருந்தார். இன்றைக்கு தமிழகத்தின் சீர்கேட்டுக்கு காரணமாக இருப்பது போதை, அந்த போதையினால் தான் குற்றவாளிகள் உருவாகிறார்கள், அதன...

‘சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

Image
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், “எத்தனையோ ஜாம்பவான...

ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் அறிமுகம்

சென்னை,நவ.25-சென்னை ஆவடி அடுத்த ஆயில் சேரியில் மெட்ராஸ் சிட்டிப்ரொமோட் டோஸ் டாட் காம் இன் புதிய மனை பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. ‌ இதற்கு ரெயின்போ கார்டன்ரெசிடென்சியல் டவுன்ஷிப் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் டி.என்.வள்ளிநாயகம், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மனை பிரிவினை திறந்து வைத்தனர். மேலும் இந்த புதிய மனை பிரிவின் சிறப்பு அம்சங்கள் பற்றி நீதி அரசர் கூறுகையில் இவ்விடத்தில் பனை மரங்களைபார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது, பனை மரத்தின் நன்மைகளை இவ்விடத்தில் மனை வாங்கும் மக்களுக்கு பனை மரத்தின் நன்மைகள் புரிய வரும். இவ்விடம் பசுமை நிறைந்த இடமாக இருப்பது மனதிற்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்று கூறினார். அதனை தொடர்ந்து நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் கூறுகையில் இது எங்களுடைய 150வது துவக்கவிழா நிகழ்ச்சியாகும். இது சுமார் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தமனைப்பிரிவு அமையப்பட்டுள்ளது. 120 வீட்டு மனைகள் 700 சதுர அடிமுதல் 2000 சதுர அடி வரை விற்பனை செய்யப்படும். மனையின் விலை ரூ.28 லட்சம் முதல் தனி...

கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ் தயாரித்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர இருக்கும் படம் "குற்றம் குறை"

Image
எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் "குற்றம் குறை " லூகாஸ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்  . இவர் விஜய் சேதுபதியின் ஜெராக்ஸ் காபி போல இருப்பது மற்றும் ஒரு சிறப்பு. மீசை ராஜேந்திரன்  கிருஷ்ணாப்பா(X army )ஆர்மி லண்டன் ஸ்ரீராமுலு; யசோதா: வந்தவாசி சுப்பிரமணி: வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர் . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் திரு மூலம் மற்றும் சதீஷ். K.சேகர்  ஒளிப்பதிவு- கார்த்திக் பாலா  இசை- ஜெயசுதாகர்  v.g ஹரி கிருஷ்ணா  படத்தொகுப்பு -ராம்நாத்  திரைப்படம் இந்த ஆண்டுகளுக்கு வெளிவர இருக்கிறது